கௌதம் மேனனின் குறும்படத்தில் சிம்பு நடிக்கிறாரா.?

கௌதம் மேனனின் குறும்படத்தில் சிம்புவும்  இந்த குறும்படத்தில் நடித்துள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் ஐபோனில் குறும்படம் ஒன்றை எடுப்பது எவ்வாறு என்று சொல்லி கொடுக்கும் வீடியோவை திரிஷா தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டிருந்ததார். அதனை தொடர்ந்து நேற்றைய முன்தினம் அந்த குறும்படத்தின் டீசரை கௌதம் மேனன் வெளியிட்டார். அதற்கு “கார்த்திக் டயல் செய்த எண்” என்று பெயரிடப்பட்டுள்ளது. அதில் திரிஷா கார்த்திக் என்பவருடன்  போனில் பேசுவது போன்ற காட்சியாகும் . அப்போது நெட்டிசன்கள் விண்ணைத் தாண்டி வருவாயா 2  தானா என்று கேள்வி எழுப்பினார்கள்.  மேலும் கார்த்திக் வேடத்தில் சிம்பு தான் நடிக்கிறாரா என்றும் கேட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் தற்போது சிம்புவும்  இந்த குறும்படத்தில் நடித்துள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்போது கார்த்திக் மற்றும் ஜெஸ்ஸியாக விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகம் தானோ கார்த்திக் டயல் செய்த எண் என்ற குழப்பத்தில் உள்ளனர் ரசிகர்கள். அது மட்டுமின்றி இந்த குறும் படத்தின்  படப்பிடிப்பை திரிஷா தனது வீட்டில் முடித்ததாகவும், சிம்பு அவர்கள் பாதிக்கட்ட படப்பிடிப்பை முடித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த குறும்படம் முழுவதும் ஊரடங்கு காரணமாக ஏற்பட்ட நெருக்கடியை வைத்து இருவரும் நடத்தும் உரையாடல் என்றும் கூறப்படுகிறது. இந்த தகவல் உண்மையா என்று தெரிய கௌதம் மேனன் தான் வாயை திறக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.