சானிடைசரால் இவ்வளவு ஆபத்து உள்ளதா?

சானிடைசரால் இவ்வளவு ஆபத்து உள்ளதா?

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதன் தீவிர பரவலை கட்டுப்படுத்த, அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், பொதுமக்கள் வெளியே செல்லும், கண்டிப்பாக  முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும், வெளியே சென்றுவிட்டு, வீட்டிற்குள் வரும்போது கிருமிநாசினி கொண்டு  சுத்தம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், சானிடைசர்களை பொறுத்தவரையில், எளிதில் தீப்பற்றக் கூடிய ஆற்றல் கொண்டது. அந்த வகையில், பொறியியல் கல்லூரியின் பேராசிரியர்ஜோகிந்தர் சிங் அவர்கள் இதுகுறித்து கூறுகையில், சுத்திகரிப்பு இரசாயனங்கள் 70% ஐசோபிரைல் ஆல்கஹால் கொண்டவை.  இந்த வேதிப்பொருள் எரியும் புள்ளியை அடைய 21 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை  தெரிவித்துள்ளார்.

இந்த சானிடைசர்களை காரில் வைத்திருப்பது பாதுகாப்பானதா? என்றால், அது மிகவும் ஆபத்தான பொருளாக தான் கருதப்படுகிறது. பொதுவாக நாம் காரை பூட்டியவுடன், காரினுள் பாட்டிலை நீண்ட நேரம் வைத்திருக்கும் போது, அதன் வெப்பநிலை அதிகரிக்கிறது. சானிடைசரில் கலந்துள்ள ரசாயனமானது வெப்பத்துடன் தொடர்புடையது. எனவே அதன் அருகில் நின்று யாராவது சிகரெட் புகைத்தால் கூட அது எளிது வெடித்து, தீ விபத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே, சானிடைசரை பயன்படுத்தும் போது, மிகவும் கவனமாக கையாள்வது அவசியமாகும்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.