கடந்த சில மாதங்களுக்கு முன் சீனா தொடர்பான பல மொபைல் செயலிக்கு மத்திய அரசு தடை செய்தது இது அனைவருக்கும் தெரிந்ததே. இருப்பினும், பல மொபைல் செயலி தடை செய்த போதிலும், சிலர் இன்னும் தடைசெய்யப்பட்ட செயலிகளை பயன்படுத்துகின்றனர். இந்த சூழலில் தடைசெய்யப்பட்ட மொபைல் செயலிப் பயன்படுத்துவதில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்று சிலர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்துள்ள மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், தடைசெய்யப்பட்ட செயலிகளை பயன்படுத்துவது தொடர்பாக ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், பிரிவு 69 ஏ இன் கீழ் மொபைல் ஆப் நிறுவனங்கள் மட்டுமே அரசு விதித்த தடை பின்பற்றாததற்காக அபராதம் விதிக்கப்படும். தடைசெய்யப்பட்ட மொபைல் செயலிகளான PUBG, TikTok மற்றும் UC Browser போன்றவற்றைப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக தனிப்பட்ட அபராதம் அல்லது நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என்று கூறியது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் மத்திய அரசு தடைசெய்யப்பட்ட சீன செயலி பயனர்களுக்கும் இது பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 15 அன்று இந்தோ-சீனா எல்லையில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து சீன செயலிகளை தடை செய்ய மத்திய அரசு தொடங்கியது.
அதன் பின்னர், இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை தாண்டிய பதட்டங்கள் அதிகமாகவே ஏற்பட்டது.தற்போது அந்த பதட்டம் குறைந்துள்ளது. இதுவரை, 200-க்கும் சீன செயலிகள் மத்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதியது.' ஐபிஎல் தொடரில் இன்றைய 34-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும்,…
Election2024 : தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 % வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019 தேர்தலில் மொத்தமாக 72.44 % வாக்குகள் பதிவாகியது. 21 மாநிலங்களில்…
ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…
Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…
Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…
Rishabh Pant : ரிஷப் பண்ட் சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ்…