கோவிஷீல்டு தடுப்பூசியின் கால அளவு குறைக்கப்படுகிறதா?

கோவிஷீல்டு தடுப்பூசியின் கால இடைவெளி குறைக்கப்பட வாய்ப்புள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

ஆக்ஸ்போர்ட் மற்றும் அஸ்ட்ராஜெனெகா இணைந்து தயாரித்த தடுப்பூசியை இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம் தயாரித்தது. இந்த தடுப்பூசி இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசியின் முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை ஆகியவற்றிற்கு இடைப்பட்ட காலம் தற்போது 84 நாட்களாக உள்ளது.

ஆனால், இந்த தடுப்பூசி கடந்த ஜனவரி மாதம் அமலுக்கு வந்தபோது இதன் இடைப்பட்ட கால அளவு 4 முதல் 6 வாரங்களாக இருந்தது. பின்னர் இந்த இடைவெளி 6 முதல் 8 வாரங்களாக மாற்றப்பட்டது. இதனை அடுத்து இந்த இடைவெளி 12 முதல் 16 வாரங்களாக மாற்றப்பட்டது. இப்படி தடுப்பூசியின் கால அளவை மாற்றுவது குறித்து மக்களிடையே பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தது.

இதில் முக்கியமாக தடுப்பூசி பற்றாக்குறையே என்று பேசப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் இதன் கால அளவு மாற்றப்படுவது குறித்து பரிசீலினை செய்யப்படவுள்ளது. நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக்குழு இது குறித்து முடிவெடுப்பார்கள். மேலும் அரசு வட்டாரங்கள் இந்த தடுப்பூசியின் இடைவெளிக்காலம் குறைக்கப்பட வாய்ப்புள்ளது என்று தெரிவித்து வருகிறது.

Recent Posts

ராகுல்- டிகாக் கூட்டணியில் சரிந்த சிஎஸ்கே ! தொடர் வெற்றிக்கு முற்று புள்ளி வைத்த லக்னோ!

ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதியது.' ஐபிஎல் தொடரில் இன்றைய 34-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும்,…

6 hours ago

ஆர்வமுடன் களமிறங்கிய வாக்காளர்கள்… கடந்த முறையை விட எகிறும் எண்ணிக்கை.?

Election2024 : தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 % வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019 தேர்தலில் மொத்தமாக 72.44 % வாக்குகள் பதிவாகியது. 21 மாநிலங்களில்…

8 hours ago

மாற்றத்துடன் பேட்டிங் களமிறங்கும் சென்னை அணி !! பந்து வீச தயாராகும் லக்னோ !!

ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…

10 hours ago

நிறைவடைந்தது தேர்தல் நேரம்…! டோக்கன் கொடுத்து வாக்குப்பதிவு தீவிரம்….!

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…

11 hours ago

துப்பாக்கிச்சூடு… EVM மிஷின் சேதம்… முடிந்தது மணிப்பூர் முதற்கட்ட தேர்தல்.!

Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…

11 hours ago

ரிஷப் பண்ட் பார்ம் எப்படி இருக்கு? ஜாகீர் கான் சொன்ன பதில்!

Rishabh Pant : ரிஷப் பண்ட்  சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு  ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ்…

11 hours ago