பெண்களை பற்றி பாஜக பேசுவதா? – ப.சிதம்பரம் கேள்வி

திமுக கூட்டணி 180 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால்தான், பாஜகவால் வெற்றியைத் திருட முடியாது என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா என பாஜக தலைவர்கள் தமிழகம் வருவதை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன் என்றும் அவர்கள் பேசப் பேச தான், தமிழக மக்கள் அவர்களின் உண்மை நிலையைப் புரிந்து கொள்வார்கள் என கூறியுள்ளார்.

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தமிழகத்தில் காலடி எடுத்து வைத்தவுடன் கலவரம் வெடிக்கிறது. வருமானவரித்துறை சோதனை பாஜகவுக்கு கைவந்த கலை. திமுக கூட்டணி 180 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால்தான், பாஜகவால் வெற்றியைத் திருட முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

பெண்களை பற்றி பாஜக பேசுவதா? என கேள்வி எழுப்பிய அவர், பெண்களை பற்றி பேச பாஜகவுக்கு தகுதி இல்லை. இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் பாஜகவிடம் அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டனர். ஆட்சி மாற்றம் ஏற்பட்டால்தான் தமிழக அரசியலில் மீண்டும் தன்மானம் உயரும் என்றும் தேர்தல் ஆணையம் முழுமையான முறையில் செயல்படுகிறது என்பதை நம்பவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்