ராசா போன்றவர்களை பேசவிட்டு, திரு.ஸ்டாலின் வேடிக்கைப் பார்க்கிறாரோ? – டிடிவி தினகரன்

0
83
TTVDINAKARAN

பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு நாவடக்கம் தேவை என டிடிவி தினகரன் ட்வீட். 

ஆ.ராசா எம்.பி சமீபத்தில், நடந்த ஒரு நிகழ்ச்சியில் இந்துக்களை இழிவுபடுத்தி பேசியதாக கூறப்படும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலான நிலையில், தற்போது அது சர்ச்சையாகி உள்ளது.

இந்த நிலையில், இதுகுறித்து டிடிவி தினகரன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இந்துமதத்தைப் பின்பற்றுபவர்களை இழிவுபடுத்தும் விதமாக தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளர் திரு.ஆ.ராசா மிகவும் கீழ்த்தரமாக பேசியிருப்பது கண்டனத்திற்குரியது. மத உணர்வுகளைத் தூண்டும் இத்தகைய பேச்சுகளை அனுமதிப்பது சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும்.

பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு நாவடக்கம் தேவை. தி.மு.க அரசின் தோல்விகளைத் திசை திருப்புவதற்காகவே ராசா போன்றவர்களை பேசவிட்டு, திரு.ஸ்டாலின் வேடிக்கைப் பார்க்கிறாரோ? என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.’ என  பதிவிட்டுள்ளார்.