Categories: உணவு

தினமும் முட்டை சாப்பிடுவது ஆபத்தா .? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்.!

தினமும் முட்டை சாப்பிடுவதன் மூலம் நீரழிவு நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலானோர் உணவுடன் முட்டை சேர்த்து சாப்பிடுவது வழக்கம் . சிலர் வேக வைத்தும் ,பாயில் செய்தும்,துருவல் செய்தும் சாப்பிடுவார்கள் . இந்த முட்டைகளை சாப்பிடுவதன் மூலம் ஏராளமான நன்மைகள் உள்ளது என்று பார்த்திருப்போம் . ஆனால் இதனால் ஆபத்தும் உள்ளது என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதாவது தினமும் ஒரு முட்டையோ அல்லது கூடுதல் முட்டையை உட்கொள்பவர்களுக்கு நீரழிவு நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .

ஒரு சாதாரண கோழி முட்டையில் 80 கலோரிகள் உள்ளது .இதனை தினமும் சாப்பிடுவதன் மூலம் நீரழிவு நோய் ஏற்படும் வாய்ப்பு 60% அதிகம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது . இந்த முட்டை உட்கொள்வதால் ஏற்படும் நீரழிவு நோய் ஆண்களை விட பெண்களுக்கே அதிகம் தென்படுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தின் தலைமையில் கடந்த 1991-ஆம் ஆண்டு முதல் 2009 வரை சீனா மருத்துவ பல்கலைக்கழகம் மற்றும் கத்தார் பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது .

கடந்த சில தசாப்தங்களாக , மக்கள் பராம்பரிய உணவுகளில் இருந்து விலகி இறைச்சி, முட்டை உள்ளிட்ட உணவு வகைகளையே அதிகம் உட்கொள்வதாகவும் ,அதிலும் 1991-2009 காலாண்டில் முட்டை உட்கொள்பவரின் எண்ணிக்கை இரு மடங்காக சீனாவில் அதிகரித்துள்ளதாக பிரிட்டிஷ் ஜேர்னல் ஆஃப் நியூட்டிரிஷனில் வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

முட்டையை சாப்பிடுவதற்கும் , நீரழிவு நோய்க்கான தொடர்பை குறித்தும் ஆய்வு நடத்திய போது ,தினமும் முட்டை உட்கொள்வதன் மூலம் மனிதனின் உடலில் ஒரு நாளைக்கு 38 கிராம் மேல் வரை அதிகரித்து ,அது 25% நீரழிவு நோய்க்கான அபாயத்தை அதிகரிப்பதாக கூறியுள்ளனர்.

அதே போன்று நாளொன்றுக்கு ஒன்றுக்கும் மேலான முட்டைகளை தவறாமல் சாப்பிடுவதன் மூலம் பெரியவர்களுக்கு நீரழிவு நோய்க்கான வாய்ப்பு 60% அதிகரித்துள்ளதாக தொற்று நோயியல் நிபுணரும் ,பொது சுகாதார நிபுணருமான மிங் லி கூறினார்.சீனாவில் பெரும்பாலான நபர்களுக்கு நீரழிவு நோய் முற்ற காரணம் அதிக முட்டை உட்கொள்வதால் தான் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன .

மேலும் இந்த நீரழிவு நோய்க்கு மற்றொரு முக்கிய காரணி டயட் என்றும் கூறியுள்ளார் . இவர்கள் நடத்திய ஆய்வில் சீனாவில் உள்ள 50 வயதான 8,545 பெரியவர்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

பட்ஜெட் விலையில் 8ஜிபி ரேம்..6000mAh பேட்டரி..கலக்கும் சாம்சங் கேலக்ஸி F15 ஸ்மார்ட் போன்.!

Samsung Galaxy F15: சாம்சங் நிறுவனம் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்த Samsung Galaxy F15 5ஜி போனின் புதிய வேரியண்ட் விற்பனைக்கு வந்துள்ளது. இது Flipkart…

17 mins ago

‘பவர்ப்ளேல விக்கெட் எடுக்க கத்துக்கணும்’- சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் !

Ruturaj Gaikwad : நேற்றைய போட்டியில் தோல்வியடைந்த பிறகு சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் பேசி இருந்தார். ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் லக்னோ அணியும்,சென்னை அணியும்…

27 mins ago

கோவை சரளாவுக்கு கட்டு கட்டாக பணம் கொடுத்த எம்.ஜி.ஆர்! காரணம் என்ன தெரியுமா?

M.G.Ramachandran : கோவை சரளாவின் சிறிய வயதில் எம்.ஜி.ஆர் அவருக்கு பணம் ரீதியாக பெரிய உதவியை செய்துள்ளார். எம்.ஜி.ஆர் உயிரோடு இருந்த காலத்தில் எந்த அளவிற்கு உதவிகளை…

44 mins ago

நாம் ஓட்டுப்போட்டு என்னவாகப்போகுது.? மாறும் நகர்ப்புற தேர்தல் மனநிலை.!

Election2024 : தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களில் இருக்கும் மாவட்டங்களை விட குறைவான எண்ணிக்கையிலேயே பெருநகர பகுதி வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. மக்களவை முதற்கட்ட தேர்தல் 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில்…

60 mins ago

21 மாநிலங்களில் வாக்குப்பதிவு நிலவரம்! எந்த மாநிலத்தில் அதிக வாக்கு சதவீதம் அதிகம்?

Election2024: நாடு முழுவதும் முதற்கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்ற 21 மாநிலங்களில் பதிவான வாக்குப்பதிவு நிலவரம் குறித்து பார்க்கலாம். 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட…

1 hour ago

ரோமியோவை அன்பே சிவம் ஆக்கிடாதீங்க! விஜய் ஆண்டனி வேதனை!

Vijay Antony : ரோமியோ போன்ற படத்தை அன்பே சிவம் ஆக்கிவிட வேண்டாம் என விஜய் ஆண்டனி கேட்டுக்கொண்டுள்ளார். நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி கடைசியாக இயக்குனர்…

2 hours ago