மத்திய அரசு உத்தரவை மீறி இ-பாஸ் நடைமுறையை தொடர்வது மனித உரிமை மீறலா?
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் கொரோன அவைரஸின் தீவிர பரவலை தடுக்க, மக்கள் ஒரு மாவட்டத்தில் இருந்து, மற்றோரு மாவட்டத்திற்கு செல்ல இபாஸ் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தமிழ்நாடு மக்கள் நுகர்வோர் பேரவை திண்டுக்கல் மாவட்ட தலைவர் விஸ்வரத்தினம், மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், மத்திய அரசு இ-பாஸ் வழங்குவதில் தளர்வுகள் அளித்துள்ளது. மக்கள் சுதந்திரமாக செயல்படுவதை தடுக்கும் வண்ணமாக, இ-பாஸ் முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக மாணவர்கள் அட்மிஷனுக்கு செல்லவும், சொந்த ஊருக்கு செல்லவும் பணி நிமித்தமாக சொந்த ஊரிலிருந்து வேறு இடங்களுக்கு செல்லவும் மக்கள் சிரம படுகின்றனர். இதில் மனித உரிமை மீறல் இல்லையா என தமிழகம் அரசிடம் விளக்கம் கேட்டு, இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும்.’ என கூறப்பட்டிருந்தது.
இதுகுறித்து விசாரித்த மனித உரிமைகள் ஆணையம், மத்திய அரசு உத்தரவை மீறி இ-பாஸ் நடைமுறையை தொடர்வது மனித உரிமை மீறலா? என 4 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு, தலைமை செயலருக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதியது.' ஐபிஎல் தொடரில் இன்றைய 34-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும்,…
Election2024 : தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 % வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019 தேர்தலில் மொத்தமாக 72.44 % வாக்குகள் பதிவாகியது. 21 மாநிலங்களில்…
ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…
Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…
Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…
Rishabh Pant : ரிஷப் பண்ட் சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ்…