இந்தியில் ட்விட்டர் கணக்கைத் துவக்கிய ஈரானின் உச்ச தலைவர்.!

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா சையித் அலி கமேனி இந்தியில் ஒரு ட்விட்டர் கணக்கைத் துவக்கியுள்ளார்.  இதற்கு முன் பல மொழிகளில் ட்விட்டர் கணக்கைத் துவக்கியுள்ளார். அதில், பாரசீக, அரபு, உருது, பிரஞ்சு, ஸ்பானிஷ், ரஷ்ய மற்றும் ஆங்கிலம் போன்ற பிற மொழிகளிலும் கணக்குகளைத் துவங்கி உள்ளார்.

சையித் அலி ஹொசைனி கமேனி  1989 முதல் பதவியில் இருக்கும் ஈரானின் இரண்டாவது மற்றும் தற்போதைய உச்ச தலைவர் ஆவார். 1981 முதல் 1989 வரை ஈரானின் ஜனாதிபதியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan