ஈரானின் மிகப்பெரிய போர்க்கப்பல் தீப்பிடித்து எரிந்து, கடலில் மூழ்கியுள்ளது!

ஈரானின் மிகப்பெரிய போர்க்கப்பலான கார்க் எனும் கப்பல் ஒன்று ஓமன் வளைகுடாவில் வைத்து தீப்பிடித்து எரிந்து கடலில் மூழ்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகியதிலிருந்து ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே கடுமையான மோதல் தொடர்ந்து வருகிறது. குறிப்பாக இந்த மோதல் காரணமாக ஓமன் மற்றும் பாரசீக வளைகுடா பகுதியில் சில ஆண்டுகளாக தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை உருவாகி வருகிறது. உலகின் முக்கியமான பல கப்பல்கள் செல்லக்கூடிய பாதையாகிய ஹார்முஸ் ஜலசதியில் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாகவே சர்வதேச நாடுகளின் சரக்குக் கப்பல்கள் மற்றும் எண்ணெய் கப்பல் மீது தொடர்ந்து மர்மமான தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கு காரணம் ஈரான் தான் என அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில், இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து ஈரான் மறுத்து வருகிறது. இந்நிலையில் தற்போது ஈரான் நாட்டிற்கு சொந்தமான மிகப்பெரிய போர்க்கப்பல் ஒன்று தீப்பிடித்து எரிந்து கடலில் மூழ்கியுள்ளது. ஓமன் வளைகுடா பகுதியான ஹார்முஸ் ஜலசந்தியின் அருகில் உள்ள ஈரான் நாட்டின் ஜாஸ்க் துறைமுகத்தில் ஈரான் நாட்டின் கடற்படைக்கு சொந்தமான கார்கில் போர் கப்பல் நிறுத்தப்பட்டிருந்துள்ளது. நேற்று அதிகாலை திடீரென இந்த கப்பலில் மளமளவென தீ கொழுந்துவிட்டு எரிந்து கப்பல் முழுவதும் தீ பரவி உள்ளது.

இதனை அடுத்து அங்கு இருந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டாலும், தீ கட்டுக்குள் வராததால் கப்பலில் இருந்த மாலுமிகள் அனைவரும் உயிர் காக்கும் ஆடைகள் அணிந்து கப்பலில் குதித்து உயிர் தப்பியுள்ளனர். இந்த தீவிபத்தில் ஈரானின் மிகப்பெரிய போர்க்கப்பல் முற்றிலுமாக தீயில் கருகி, அப்படியே கடலில் மூழ்கியுள்ளது. கப்பலில் தீ பிடித்ததற்கான காரணம் என்ன? இது விபத்தா அல்லது திட்டமிடப்பட்டதா என்பது குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை.

Rebekal

Recent Posts

ராகுல்- டிகாக் கூட்டணியில் சரிந்த சிஎஸ்கே ! தொடர் வெற்றிக்கு முற்று புள்ளி வைத்த லக்னோ!

ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதியது.' ஐபிஎல் தொடரில் இன்றைய 34-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும்,…

3 hours ago

ஆர்வமுடன் களமிறங்கிய வாக்காளர்கள்… கடந்த முறையை விட எகிறும் எண்ணிக்கை.?

Election2024 : தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 % வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019 தேர்தலில் மொத்தமாக 72.44 % வாக்குகள் பதிவாகியது. 21 மாநிலங்களில்…

4 hours ago

மாற்றத்துடன் பேட்டிங் களமிறங்கும் சென்னை அணி !! பந்து வீச தயாராகும் லக்னோ !!

ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…

6 hours ago

நிறைவடைந்தது தேர்தல் நேரம்…! டோக்கன் கொடுத்து வாக்குப்பதிவு தீவிரம்….!

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…

7 hours ago

துப்பாக்கிச்சூடு… EVM மிஷின் சேதம்… முடிந்தது மணிப்பூர் முதற்கட்ட தேர்தல்.!

Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…

7 hours ago

ரிஷப் பண்ட் பார்ம் எப்படி இருக்கு? ஜாகீர் கான் சொன்ன பதில்!

Rishabh Pant : ரிஷப் பண்ட்  சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு  ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ்…

7 hours ago