#IPLBreaking:டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் நட்சத்திர பவுலர் அன்ரிச் நார்ட்ஜேவிற்கு கொரொனா..!

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் நட்சத்திர பவுலரான அன்ரிச் நார்ட்ஜேவுக்கு கொரொனா தொற்றானது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் அவர் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளன.

ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியானது ஐபிஎல் 2021 தொடரின் தனது முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் ஏப்ரல் 10ஆம் தேதி மோதி 7 விக்கெட்டுகள் வித்தியசத்தில் வெற்றி பெற்றது.

நாளை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன்,டெல்லி கேபிட்டல்ஸ் அணியானது தனது 2வது போட்டியில் மோத உள்ள இந்த சமயத்தில்,டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நார்ட்ஜேவுக்கு கொரொனா தொற்றானது உறுதி செய்யப்பட்டுள்ளதனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியினர் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.

வேகப்பந்து பவுலரான அன்ரிச், கொரொனா பரிசோதனை செய்யப்பட்ட அறிக்கையுடன் இந்தியா வந்தார்.அதில் கொரொனா நெகடிவ் என இருந்தது.அவருடன் இந்தியா வந்த தென்னாப்பிரிக்க வீரர்கள், காகிசோ ரபடா, டேவிட் மில்லர், லுங்கி நிகிடி மற்றும் குவின்ட டீ காக் ஆகியோருக்கும் கொரொனா நெகட்டிவ் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ரபடாவும் டெல்லி கேபிடல்ஸ் அணியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

10 நாட்களுக்கு பிறகு தனிமைப்படுத்தப்பட்ட அனைவரையும் பரிசோதனை செய்ததில்,எதிர்பாராத விதமாக அன்ரிச்சிற்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது.இதனையடுத்து, இனி வரும் ஐபிஎல் போட்டிகளில் அன்ரிச் பங்கேற்க மாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.