#IPL2023 : டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்த பஞ்சாப் அணி…!

டாஸ் வென்ற பஞ்சாப் அணி பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. 

16-வது சீசன் ஐபிஎல் தொடர் விறுவிறுப்பான இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் பிளேஆப் சுற்றுக்கு செல்ல ஒவ்வொரு அணியும் போராடிக் கொண்டிருக்கிறது. இதில் குஜராத் அணி முதல் அணியாக பிளேஆப்ஸ்-க்கு முன்னேறியுள்ளது.

இந்த நிலையில், இன்று பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன. பஞ்சாபிற்கு 2 போட்டிகள் மீதமுள்ள நிலையில் இரண்டிலும் அதிக ரன்ரேட் அடிப்படையில் வெல்ல வேண்டும் மற்றும் பிற அணிகளின் வெற்றி தோல்விக்காக காத்திருக்க வேண்டும். அதன்பிறகு பஞ்சாபின் பிளேஆப் வாய்ப்பு தெளிவாகும்.

அதே நேரத்தில் டெல்லி அணி கிட்டத்தட்ட பிளேஆப் ரேஸில் இருந்து வெளியேறினாலும் இன்றைய போட்டியில் வென்றால் பஞ்சாப் அணிக்கு அது மேலும் சிக்கலை ஏற்படுத்தும். ஏற்கனவே இந்த இரண்டு அணிகளும் விளையாடியுள்ள நிலையில், பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.

இன்று நடைபெறும் போட்டியில், பஞ்சாப் அணி டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. இன்றைக்கு நடைபெறும் போட்டி பஞ்சாப் அணிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.