#IPL2022: புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கான போட்டி.. வெற்றிபெறப்போவது யார்?

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 23-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி, புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெரும்.

ஐபிஎல் திருவிழா விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 23-வது போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, மும்பையில் உள்ள DY பட்டில் மைதானத்தில் தொடங்கவுள்ளது.

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் 4 போட்டிகள் விளையாடியுள்ளது. அதில் ராஜஸ்தான் அணி 3 போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. அதனைதொடர்ந்து குஜராத் அணி, 3 போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் 4-ம் இடத்தில் உள்ளது. இன்று நடைபெறும் போட்டியில் வெற்றிபெறும் அணி, புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெறுவதால் இரு அணிகளும் சிறப்பாக விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்க்கப்படும் XI:

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

ஜோஸ் பட்லர், ராஸ்ஸி வேன் டெர் டுசென், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), ஷிம்ரன் ஹெட்மேயர், ரியான் பராக், குல்தீப் சென், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரென்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல் ஆகிய வீரர்கள் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குஜராத் டைட்டன்ஸ் அணி:

மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), சுப்மன் கில், சாய் சுதர்சன், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டேவிட் மில்லர், ராகுல் தெவாடியா, அபினவ் மனோகர், ரஷித் கான், லாக்கி பெர்குசன், முகமது ஷமி, தர்ஷன் நல்கண்டே ஆகிய வீரர்கள் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.