கொல்கத்தா- பெங்களூர் இடையேயான இன்றைய ஐபிஎல் போட்டி ஒத்திவைப்பு..!

கொல்கத்தா வீரர்கள் வருண் சக்கரவரத்தி, சந்தீப் சர்மா ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி ஆனதால் இன்று நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

ஐபிஎல் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறவுள்ள 30 வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விருந்து. இந்த நிலையில் தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் உள்ள தமிழகத்தை சேர்ந்த வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியார் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் இன்று நடைபெறும் இந்த  போட்டியை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் இந்த போட்டியை வேறு தேதிக்கு மாற்றி வைக்க குஜராத் கிரிக்கெட் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் ஆலோசனை செய்து விரைவில் அறிவிப்பார்கள்  என்று கூறப்படுகிறது. மேலும் கொரோனா உறுதி செய்யப்பட்ட வருண் சக்கரவரத்தி, சந்தீப் சர்மா ஆகிய  இரண்டு வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.