ஸ்ரேயாஸ் ஐயருக்கு 12 லட்சம் அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்..!

ஐபிஎல் தொடரின் 11வது லீக் போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் களம் காணியது. மேலும் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 162 ரன்கள் குவித்தனர்.

அடுத்ததாக அதனை தொடர்ந்து 163 ரன்கள் என்ற இலக்குடன் பேட்டிங்கில் டெல்லி அணி களமிறங்கியது. தொடக்கத்திலே தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணி 20 ஓவர் முடிவில் இறுதியாக 7 விக்கெட்டுகள் இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதனால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் நேற்று நடந்த இந்த போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தாமதமாக பந்து வீசிய காரணத்தினால் டெல்லி அணியின் கேப்டன் ஐயருக்கு 12 லட்சம் ஐபிஎல் நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.