நேற்று நடைபெற்ற ஏலத்தில் முன்னணி வீரர்கள் பலர் ஏலத்தில் இருந்து புறக்கணிப்பட்டனர்.
2008-ம் ஆண்டு இந்தியன் ப்ரீமியர் லீக் தொடங்கப்பட்டது. இதுவரை 11 ஐ.பி.எல் சீசன்கள் நடத்தப்பட்டுள்ளன. 12-வது ஐ.பி.எல் போட்டிக்கான ஏலம் ஜெய்ப்பூரில் இன்று தொடங்கியுள்ளது.இந்தியன் ப்ரீமியர் லீக் 2019-ஆம் ஆண்டுக்கான ஏலம் நேற்று நடைபெற்றது.
இதில் அதிகபட்சமாக உனத்கட், வருண் சக்கரவர்த்தி 8 கோடியே 40 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டனர்.ஏலத்தில் இந்திய அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ்வை மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ. 8.40 கோடிக்கு வாங்கியது.அதேபோல் தமிழகத்தை சேர்ந்த வருண் சக்கரவர்த்தி என்னும் 17வயது இளைஞர் ரூ.8.40 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணியால் விலை கொடுத்து வாங்கியது.
ஆனால் நேற்று நடைபெற்ற ஏலத்தில் முன்னணி வீரர்கள் பலர் ஏலத்தில் இருந்து புறக்கணிப்பட்டனர்.குறிப்பாக வெளிநாட்டு வீரர்களில் உஸ்மான் க்வாஜா, ஷான் மார்ஷ்,பிரெண்டன் மெக்கலம், மார்ட்டின் குப்டில், ஹாஷிம் அம்லா, அலெக்ஸ் ஹெல்ஸ் புறக்கணிக்கப்பட்டார்கள்.அதேபோல் இந்திய வீரர்களில் செத்தேஷ்வர் புஜாரா, சௌரப் திவாரி, மனோஜ் திவாரி ஆகியோர் புறக்கணிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல் அதிரடி இடக்கை ஆட்டக்காரர் யுவராஜ்சிங்கை மட்டும் யாரும் ஏலம் எடுக்க வில்லை .பின் அவரை ரூ.1 கோடிக்கு ஏலத்தில் எடுத்ததது மும்பை அணி.