IPL 2018:முத்தான முதல் வெற்றியை பதிவு செய்தது மும்பை அணி..!

இன்று 14 வதுதொடர் மும்பையில் உள்ள வங்கதே   ஸ்டேடியத்தில்   வைத்து நடைபெறும் போட்டியில்  மும்பை இந்தியன்ஸ்  மற்றும்  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிகள் மோதின .

இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதில் முதலாவது களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர் முடிவில் 213 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தனது அபார ஆட்டத்தை வெளிபடுத்தியது .

அடுத்து 214 ரன்களை இலக்காகக் கொண்டு  களமிறங்கியது  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி . ஆட்டத்தின் தொடக்க வீரர்களகாக கேப்டன் விராத் கோலி மற்றும் காக் களமிறங்கினர்.

தொடக்க வீரர் காக் 19 ரன்களிலும்,சிங் 16 ரன்களிலும் , வோகேஸ் 11 ரன்களிலும் ,ஆட்டம் இழந்தனர் .மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தனர் .

கேப்டன் விராத் கோலி கடைசி வரை தனது விடா முயற்சியை கைவிடமால் 92 ரன்களை குவித்தார்.

மும்பை இந்தியன்ஸ் அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது .

மும்பை அணி தனது தொடர் தோல்விக்கு முற்றிபுள்ளி வைத்தது

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment