IPL 2018:கெத்தான வெற்றி பெற்ற சென்னை அணி!டெல்லி டேர்டெவில்ஸ் அணியை வீழ்த்தி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

சென்னை சூப்பர் கிங்ஸ்-டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் புனேயில் உள்ள மராட்டிய கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இன்று இரவு நடைபெறும் 30-வது லீக் ஆட்டத்தில் மோதியது.

இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங் செய்ய முடிவு செய்தது.

 

 

பின்னர் களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரர்கள் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினர்.

 

சென்னை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு   211 ரன்கள் அடித்தது.அதிகபட்சமாக வாட்சன் 64 ரன்களும்,தோனி 51,ரயுடா 41, டுப்லேசிஸ் 33 ரன்களும் அடித்துள்ளனர்.டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் பந்துவீச்சில் மிஸ்ரா ,சங்கர் ,மேக்ஸ்வெல் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணி  20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு   198 ரன்கள் மட்டுமே  அடித்தது.அதிகபட்சமாக பண்ட் 79,விஜய் சங்கர் 52 ரன்களும் அடித்துள்ளனர்.சென்னை அணி அணியின் பந்துவீச்சில் ஆஷிப்  2 விக்கெட் கைப்பற்றினர்.

இதன் மூலம் சென்னை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment