சிதம்பரத்துக்கு செப்டம்பர் 2ஆம் தேதி வரை காவல் நீட்டிப்பு -நீதிமன்றம் உத்தரவு

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்துக்கு செப்டம்பர் 2 -ஆம் தேதி வரை சிபிஐ  காவலை  நீட்டித்து சிபிஐ  நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன் ஜாமீன் கோரி சிதம்பரம் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.இதனையடுத்து சிதம்பரம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கு இடையில் தான் கடந்த 21-ஆம் தேதி சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தனர்.இதனையடுத்து சிதம்பரம் சிபிஐ சநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு 5 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.பின்னர் கடந்த 26-ஆம் தேதி சிதம்பரம்  5 நாட்கள் காவல் முடிந்து ஆஜர்படுத்தப்பட்டபோது மீண்டும் அவருக்கு ஆகஸ்ட் 30-ஆம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டது. இன்றுடன் சிதம்பரத்தின் காவல் முடிந்த  நிலையில் டெல்லியில் உள்ள சிபிஐ  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.அவருக்கு நீதிமன்றம் செப்டம்பர் 2 -ஆம் தேதி வரை நீட்டித்து சிபிஐ  நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சிதம்பரம் தரப்பு நீதிமன்ற காவலில் இருக்க சம்மதம் தெரிவித்ததை அடுத்து, செப்டம்பர் 2 வரை அவரை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

மேலும் உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறைக்கு எதிரான வழக்கில் சிதம்பரத்தை செப்டம்பர் 5-ஆம் தேதி வரை கைது செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.