மும்பையில் கொரோனா நோயாளிகளுக்காக ரோபோ டிராலி அறிமுகம்.!

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. இதனால், கொரோனா தடுப்பு பணியில் செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தங்களை காத்து கொள்ள இவர்களுக்கு கவச உடைகளை கொடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், கொரோனா நோயாளிகளுடன் அதிக நேரம் செலவிடும் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சில , மருத்துவர்கள்,  செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர். நோயாளிகளுடன் அதிக நேரம் இருப்பதால் இவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

 இந்நிலையில், மும்பை மாநகராட்சி ரோபோ டிராலி ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த, ரோபோ டிராலி கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. மேலும், கழிவு பொருட்களை சேகரிக்கவும் பயன்படுகிறது. இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன்  இருந்து செவிலியர்கள் உள்ளிட்டோர் விலகி இருக்க முடியும்.

இதன் காரணமாக அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. மும்பையிலுள்ள பொடார் மருத்துவமனையில் நேற்று முதல் ரோபோ டிராலி செயல்பாட்டுக்கு வந்தது.

author avatar
murugan