அக்டோபர் 26 முதல் இந்தியா-ஜெர்மனி இடையே சர்வதேச விமானங்கள் இயக்கம்.!

ஏர் இந்தியா அக்டோபர் 26 முதல் தனது ஜெர்மனி விமானங்களைத் இயக்கப்போவதாக ட்வீட் செய்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில்  போடப்பட்ட புதிய ஒப்பந்தம் அடுத்த ஆண்டு மார்ச் 28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அக்டோபர் 20 முதல் அக்டோபர் 26 வரை ஏர் இந்தியா டிக்கெட் வைத்திருப்பவர்கள் அக்டோபர் 26 க்குப் பிறகு விமான நிறுவனத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், இந்தியாவிற்கும் ஜெர்மனிக்கும் இடையில் புதிய ஒப்பந்தம் குறித்து மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி சமீபத்தில் இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தெரிவித்தார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.