பொறியியல் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள் இட ஒதுக்கீடு வழங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் பி.இ, பி.டெக் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் வினியோகம் இன்று தொடங்கியது. அதன்படி, https://tneaonline.org என்ற இணையதளத்தில் வரும் ஆகஸ்ட் மாதம் 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பொறியியல் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள் இட ஒதுக்கீடு வழங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இடஒதுக்கீடு வழங்க ஏதுவாக இட ஒதுக்கீடு வழங்க ஏதுவாக ஆன்லைன் விண்ணப்பத்தில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்துள்ளீர்களா? என்று விவரம் கோரி உள்ளது.
ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் குழுவின் பரிந்துரை அடிப்படையில் 7.5% முதல் 10% வரை இட ஒதுக்கீடு அமலாக வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், செப்.4ம் தேதி இடஒதுக்கீடு அடிப்படையில் பி.இ தரவரிசை பட்டியல் வெளியாக வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது.
B.E / B.TECH படிப்புகளுக்கு விண்ணப்ப பதிவு தொடங்கிய முதல் நாளில் 25,611 பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்த 25,611 பேரில் 10,084 பேர் விண்ணப்ப கட்டணம் செலுத்தியுள்ளனர் என்றும் மாணவர் சேர்க்கை குழு செயலர் கூறியுள்ளார். மேலும், 25,611 பேரில் 5,363 பேர் தங்களது சான்றிதழை பதிவேற்றம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Ghilli : கில்லி படத்தில் விக்ரம் நடிக்க மறுத்த காரணம் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. இயக்குனர் தரணி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான…
Meta Horizon OS : மெட்டா நிறுவனம் உருவாகியுள்ள ஹரிசான் இயங்குதளத்தை VR ஹெட்செட்களில் மற்ற நிறுவனங்களும் பயன்படுத்தும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. மெட்டா நிறுவனர் மார்க்…
Morne Morkel : லக்னோ அணியின் பவுலிங் பயிற்சியாளரான மோர்னே மோர்க்கல் மாயங்க் யாதவின் உடற்தகுதியை குறித்து செய்தியாளர்களிடம் பேசி இருக்கிறார். இந்த ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் …
Mumbai Indians : இப்படி கேப்டன் சி இருந்தா பிளே ஆஃப் போகமுடியாது என மனோஜ் திவாரி மும்பை அணியை விமர்சித்து பேசியுள்ளார். நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட்…
West Bengal : மேற்கு வங்கத்தில் உள்ள நாட்டின் எல்லை வழியாக பலர் ஊடுருவுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளர். மக்களவை தேர்தலின் 7 கட்டங்களிலும்…
Arvind Kejriwal : டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைதான அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்ற காவல் மே மாதம் 7ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. டெல்லி…