தமிழகத்தில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல்….! பட்ஜெட் தாக்கல் செய்கிறார் ஓ.பி.எஸ்…!

இன்று சென்னை வாலாஜாசாலை, கலைவாணர் அரங்கில் கூடும் சட்டப்பேரவையில், தமிழக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

இன்று சென்னை வாலாஜாசாலை, கலைவாணர் அரங்கில் கூடும் சட்டப்பேரவையில், தமிழக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இன்று காலை 11 மணியளவில் துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

தமிழக சட்டப்பேரவையில், துணைமுதல்வர் ஓ.பி.எஸ் 10-வது முறையாக பட்ஜெட்  தாக்கல் செய்கிறார். தமிழக சட்டப்பேரவையின் கடைசி கூட்டத்தொடர் என்பதால், பல்வேறு அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளதாகவும், சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், மக்களை கவர பல்வேறு திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.