பொது விநியோக திட்டத்திற்காக 20,000 டன் பருப்பு மற்றும் 80 லட்சம் லிட்டர் பாமாயில் எண்ணெய் கொள்முதலுக்கான டெண்டருக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை கிளையில், கரூர் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அவருடைய மனுவில் தமிழ்நாடு உணவு பொருள் வாணிப கழகம் சார்பாக 2 கோடி குடும்ப அட்டைதாரருக்கு பருப்பு, பாமாயில், சீனி போன்ற பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பாக வழங்கப்படக்கூடிய அத்தியாவசிய பொருட்களுக்கான ஏலத்தில் கலந்து கொள்ள திறன், உள்கட்டமைப்பு, அனுபவம், ஆண்டு வருமானம் ஆகியவை அடிப்படையாக உள்ளன. இதன்படி 2021-ம் பிப்ரவரி 25-ம் தேதி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் இயக்குனர் குழு சார்பாக கூட்டம் நடைபெற்றுள்ளது.
இந்த ஏலத்தில் கலந்து கொள்ள முந்தைய நிபந்தனைகள்படி கலந்துகொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய நிபந்தனை என்பது, கடைசி 3 ஆண்டு வருமானம் ரூ.71 கோடியாக இருக்க வேண்டும். ஆனால், தற்போது வெளியாகியுள்ள நிபந்தனைப்படி ரூ.11 கோடி ஆண்டு வருமானம் இருந்தால் போதும் என உள்ளது. மேலும், டெண்டர் அறிவிப்பின் விதிமுறைகளை சரியாக பின்பற்றப்படவில்லை.
எனவே, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பாக, பொது விநியோக திட்டத்திற்காக 20,000 டன் பருப்பு மற்றும் 80 லட்சம் லிட்டர் பாமாயில் எண்ணெய் கொள்முதலுக்கான டெண்டருக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பாக, பொது விநியோக திட்டத்திற்காக 20,000 டன் பருப்பு மற்றும் 80 லட்சம் லிட்டர் பாமாயில் எண்ணெய் கொள்முதலுக்கான டெண்டருக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், இதுதொடர்பாக தமிழக அரசு தரப்பில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Kerala: ராகுல் காந்திக்கு டிஎன்ஏ சோதனை செய்ய வேண்டும் என்று கேரளா எம்எல்ஏ கூறியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக…
Aparna Das Marriage: மலையாள சினிமாவின் அபர்ணா தாஸ் மற்றும் தீபக் பரமா பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். சமீபத்தில் நிச்சயதார்த்த விழா முடிந்து காதலை அறிவித்த…
Priyanka Gandhi: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உங்கள் தாலியை திருடிவிடும் என மோடி விமர்சித்த நிலையில், காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் பிரியங்கா காந்தி காட்டமாக பதில் கூறியுள்ளது.…
ஐபிஎல் 2024: நேற்றை நடைபெற்ற போட்டியில் லக்னோ அணிக்கு எதிரான தோல்வி குறித்து சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேட்டியளித்தார். கடந்த மாதம் 22ம் தேதி தொடங்கிய…
Heat wave: இந்தியாவிலேயே அதிகப்பட்ச வெப்பநிலை பதிவான மாவட்டங்களில் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம் 3ஆவது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக ஆந்திர மாநிலம் அனந்த்பூரில் 110.3 டிகிரி…
LokSabha Elections 2024: மக்களவை 2ஆம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் ஓய்கிறது. 2ஆம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் (ஏப்ரல் 24) முடிவடைகிறது. கேரளா,…