ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணி தீவிரம் – மத்திய பிரதேசத்தில் பரபரப்பு!

மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது குழந்தையை மீட்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது.

சிறுவர்களின் ஆழ்துளை கிணறு மரணங்கள் அதிகரித்து வரும் நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள நிவாரி எனும் மாவட்டத்தில் நேற்று ஹரிகிருஷ்ணன் என்பவரால் அவரது வயலில் தோண்டப்பட்டிருந்த 200 அடி நீளமுள்ள ஆழ்துளைக்கிணற்றில் அவரது 4 வயது மகன் மூடப்பட்டிருந்த இரும்பு சட்டியை அகற்றி விளையாடிய போது எதிர்ப்பாராத விதமாக அதற்குள் தவறி விழுந்துவிட்டார்.

இந்நிலையில், தீயணைப்பு  துறையினருக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு விரைந்த வீரர்கள் குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் ராணுவமும் அங்கு வரவழைக்கப்பட்டு உள்ளது. புல்டோஸரின் உதவியுடன் குழந்தையை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

author avatar
Rebekal