சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கு பதிலாக, தொழில் தொடங்குவதை எளிதாக்குகிறது – கனிமொழி

சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கு பதிலாக, தொழில் தொடங்குவதை எளிதாக்குகிறது – கனிமொழி

சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கு பதிலாக, தொழில் தொடங்குவதை எளிதாக்குகிறது என்று  கனிமொழி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தற்போது, “சூழலியல் தாக்க மதிப்பீடு 2006” நடைமுறையில் உள்ளது.இதன்படி, சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படுத்தும் திட்டமாக இருப்பின் அதற்கு அனுமதி மறுக்கவும் ,ஆபத்து ஏற்படுத்தாத திட்டமாக இருப்பின் அனுமதி வழங்குவதும் குறித்து அரசு அமைத்த குழு ஆய்வு செய்யும்.

இதற்கிடையில்  புதிய மாறுதல்களுடன் கூடிய புதிய வரைவு கடந்த மார்ச் மாதம் 12 -ஆம் தேதி மத்திய அரசு “சூழலியல் தாக்க மதிப்பீடு 2020” என்ற பெயரில் வெளியிட்டது. ஆனால்  “சூழலியல் தாக்க மதிப்பீடு 2020”  வரைவிற்கு  சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இது குறித்து பல தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் திமுக எம்.பி. கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,புதிய சுற்றுச்சூழல் கொள்கை வரைவு,சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கு பதிலாக, தொழில் தொடங்குவதை எளிதாக்குகிறது.மனிதர்கள் நலனை விலையாக கொடுத்து வளர்ச்சி பற்றி பேசுகிறது.நாடு முழுக்க கோலங்கள் மூலம் இக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. வரையப்பட்ட சில கோலங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

Join our channel google news Youtube