ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்ததன் நினைவாக கல்வெட்டு- அமைச்சர் உதயகுமார்

ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்ததன் நினைவாக கல்வெட்டு திறக்கப்பட்டுள்ளது என்று  அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இது  தொடர்பாக   அமைச்சர் உதயகுமார் கூறுகையில், சென்ற ஆண்டு போராட்டத்திற்கு பின் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் சேர்ந்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்ததன் நினைவாக கல்வெட்டு திறக்கப்பட்டுள்ளது.ஜல்லிக்கட்டுக்காக போராடியவர்களின் நினைவாக, நினைவுச்சின்னம் அமைக்க முயற்சிகள் எடுக்கப்படும் .ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறுவது குறித்து அரசுக்கு எடுத்துரைப்போம் என்று  அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

Leave a Comment