எம்.எல்.ஏ-க்களுக்கு புத்தாக்க, கணினி பயிற்சி – சபாநாயகர் அப்பாவு

எம்.எல்.ஏ-க்களுக்கு புத்தாக்க, கணினி பயிற்சி வழங்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். 

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 13-ஆம் தேதி சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் தொடங்கியது.  இந்த  கூட்டத்தில், பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யட்டது. இதனை தொடர்ந்து, பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த சட்டப்பேரவை கூட்டமானது செப்டம்பர் 13-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்நிலையில், இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தில் பேசிய சபாநாயகர் அப்பாவு, சென்னை சேப்பாக்கம் முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் விடுதியில் மாலை 4 மணிக்கு, எம்.எல்.ஏ-க்களுக்கு வரும் திங்கள், செவ்வாய்கிழமைகளில் புத்தாக்க பயிற்சி அளிக்கப்படும் என்றும், புதன் வெள்ளி வரை கணினி பயிற்சி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.