கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனைவி தூக்கு போட்டு தற்கொலை!!!

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே தவிட்டவிளையை சேர்ந்தவர் ரகுராஜன். இவருடைய மனைவி ரூபினி இவர்களுக்கு திருமணமாகி 2 வருடம் ஆகிறது. இவர்களுக்கு 10 மாத கைக்குழந்தை ஒன்று உள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ரகுராஜனும், ரூபினியும் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்று பிறகு வீடு திரும்பியுள்ளனர். அதன் பின்பு  ரூபினிக்கும், ரகுராஜனுக்கும் இடையே ஒரு சிறிய தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் மனம் உடைந்த ரூபினி அவரது வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment