அமைச்சர் துரைக்கண்ணு மறைவிற்கு – பிரதமர் மோடி இரங்கல்.!

அமைச்சர் துரைக்கண்ணு மறைவிற்கு பிரதமர் மோடி தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு. நேற்று நள்ளிரவு மூச்சு திணறல் காலமானார்.

தற்போது இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் உட்பட பலர் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கலை தெரிவித்துள்ளார்.

அதில், தமிழக வேளாண்மை துறை அமைச்சர் திரு.ஆர்.துரைக்கண்ணு மறைவு வருத்தமளிப்பதாகவும், சமுதாயத்திற்கு சேவை செய்வதற்கும் விவசாயிகளுக்கு அங்கீகாரம் அளிப்பதற்கும் அவர் குறிப்பிடத்தக்க பல முயற்சிகளை மேற்கொண்டார். அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் இந்த சோகமான நேரத்தில் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.