சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் தான் நடிக்க வாய்ப்புள்ளதாக வடிவேலு தெரிவித்துள்ளார்.
இயக்குனர் பி வாசு இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சந்திரமுகி. ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, பிரபு, விஜயகுமார், நாசர், வினீத் ராதாகிருஷ்ணன், சோனு சூட், போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் வித்தியாசாகர் இசையமைத்திருந்தார்.
முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகவுள்ளது. அதையும் இயக்குனர் பி வாசு இயக்குகிறார். அதில் ரஜினி நடித்த வேட்டையன் கதாபாத்திரத்தில் நடிகர் ராகவ லாரன்ஸ் நடிப்பார் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், முதல் பாகத்தில் நடிகர் வடிவேலு (முருகேசன்) என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதைபோல் இரண்டாம் பாகத்திலும் நடிக்க வாய்ப்புள்ளதாக அவரே கடந்த சில நாட்களுக்கு முன்பு தெரிவித்துள்ளார்.
நீண்ட ஆண்டுகள் கழித்து நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவில் இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் கதையை மையமாக வைத்து எடுக்கப்படவுள்ள படத்தின் மூலம் கதாநாயகனாக ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளார்.
இந்த படத்தின் அறிவிப்பை இயக்குனர் சுராஜ் மற்றும் வடிவேலு பத்திரிக்கையாளர்களை சந்தித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தனர். அப்போது பேசிய வடிவேலு ” சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் நடிக்க வாய்ப்புள்ளது” என கூறியுள்ளார். விரைவில் சந்திரமுகி 2 அறிவிப்பு வெளியாகும் போது வடிவேலு நடிக்கும் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
IB Recruitment 2024 : உள்துறை அமைச்சகம் - உளவுத்துறை பணியகம் (IB) தற்போது மொத்தம் 660 காலியிட பணிகளுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உள்துறை மற்றும் உளவுத்துறை பணியகத்தில்…
Nayanthara : பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் நயன்தாராவுக்கு பாலிவுட்டில் படம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளதாக தகவல். நயன்தாராவின் மார்க்கெட் இப்போது எப்படி இருக்கிறது என்பது…
Election2024: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் வாக்களிக்க முடியாமல் 500 அரசு ஊழியர்கள் ஏமாற்றம். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் வாக்குப்பதிவு…
Election2024 : பாஜக பிரமுகரும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பூ #Vote4INDIA என சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். நாடாளுமன்ற முதற்கட்ட தேர்தல் இன்று (ஏப்ரல் 19)…
Soori : தனது பெயர் விடுபட்டதால் வாக்களிக்க முடியவில்லை என நடிகர் சூரி வேதனையுடன் பேசியுள்ளார். இன்று (ஏப்ரல் 19) -ஆம் தேதி நாடு முழுவதும் மக்களவை…
Amla juice- நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி இப்பதிவில் அறியலாம் . நெல்லிக்காய் : ஆயுளை வளர்க்கும் கனி எனவும் நெல்லிக்கனி அழைக்கப்படுகிறது. ஏழைகளின்…