INDvSL: மழையால் முதல் போட்டி கைவிடப்பட்டது.!

  • போட்டி தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் மழை பெய்ததால் போட்டி தொடங்க  தாமதம் ஆனது.
  • பின்னர் மைதானம் ஈரப்பதமாக இருந்ததால் போட்டி கைவிடப்பட்டது.

இலங்கை அணி இந்தியாவில் சுற்று பயணம் செய்து 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.இந்நிலையில் இன்று இந்தியா -இலங்கை  இடையிலான முதல் டி20 போட்டி இரவு 7 மணிக்கு கவுகாத்தியில் உள்ள பார்சபரா மைதானத்தில் போட்டி நடைபெற உள்ளதாக இருந்தது. இதை அடுத்து போட்டி தொடங்க டாஸ் போடப்பட்டது.

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.ஆனால் போட்டி தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் மழை பெய்ததால் போட்டி தாமதமாக தொடங்கும் என பிசிசிஐ அறிவித்தது.

பின்னர் மழை நின்று விட்டது.இதை தொடர்ந்து அங்கு பெய்த மழையால் மைதானம் ஈரப்பதமாக காணப்பட்டது.இதையடுத்து நடுவர்கள் மைதானத்தை ஆய்வு செய்தபோது மைதானம் விளையாடுவதற்கு ஏற்றாற்போல இல்லை என்பதால் போட்டி கைவிடப்பட்டது என அறிவிக்கப்பட்டது.இரண்டாவது போட்டி நாளை மறுநாள் நடைபெற உள்ளது.

author avatar
murugan