#INDvENG: மூன்றாவது ஒருநாள் போட்டி… டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச முடிவு..!

#INDvENG: மூன்றாவது ஒருநாள் போட்டி… டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச முடிவு..!

இங்கிலாந்து எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச தேர்வு.

இங்கிலாந்துக்கு சுற்று பயணம் மேற்கொண்ட இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 ஒரு நாள் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் இரண்டு ஒருநாள் போட்டி முடிவடைந்துள்ளது. இரண்டு போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில், இன்று மூன்றாவது ஒரு நாள் போட்டி வர்செஸ்டரில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

நியூசிலாந்து அணி வீராங்கனைகள்:

லாரன் வின்ஃபீல்ட் ஹில், டாமி பியூமண்ட், ஹீதர் நைட் (கேப்டன் ), நடாலி ஸ்கைவர், ஆமி எலன் ஜோன்ஸ் , சோபியா டங்க்லி, கேத்ரின் ப்ரண்ட், சாரா க்ளென், அன்யா ஷ்ரூப்சோல், சோஃபி எக்லெஸ்டோன், கேட் கிராஸ்

இந்திய அணியின் வீராங்கனைகள்:

ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், மிதாலி ராஜ் (கேப்டன்), ஹர்மன்பிரீத் கவுர், தீப்தி சர்மா, சினே ராணா, தானியா பாட்டியா, ஷிகா பாண்டே, ஜூலன் கோஸ்வாமி, பூனம் யாதவ் ஆகியோர் இடம்பெறுள்ளனர்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.
Join our channel google news Youtube