53 பேருடன் காணாமல் போன நீர்மூழ்கி கப்பலின் இடத்தை கண்டறிந்த இந்தோனேஷியா!!

கடற்படைக்கு சொந்தமான 53 பேருடன் மாயமான நீர்மூழ்கி கப்பலின் இடத்தை கண்டறிந்த இந்தோனேஷியா அதிகாரிகள்.

இந்தோனேஷிய கடற்படையைச் சோ்ந்த கே.ஆா்.ஐ. நங்காலா – 402 நீா்மூழ்கிக் கப்பல் 53 பேருடன் பாலி தீவு அருகே கடந்த புதன்கிழமை அன்று பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அப்போது அந்தக் கப்பலுடனான தொடா்பு துண்டிக்கப்பட்டது. பின்னர் 200 மீட்டா் ஆழம் வரையிலான அழுத்தத்தை மட்டுமே தாக்குப்பிடிக்கக் கூடிய அந்த நீா்மூழ்கிக் கப்பல், 600 முதல் 700 மீட்டா் வரையிலான ஆழத்துக்கு அது சென்றிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்திருந்தன.

இதையடுத்து, அந்த கப்பலைத் தேடும் பணியில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜொ்மனி உள்ளிட்ட நாடுகள் இந்தோனேசியாவுக்கு உதவி வருகின்றன. கடலுக்குள் மாயமான கப்பலைக் கண்டறிந்து, அதில் சிக்கியுள்ள 53 பேரை உயிருடன் மீட்பதற்கான இறுதிக்கட்ட முயற்சியில் அந்த நாட்டு கடற்படை தீவிரமாக ஈடுபட்டு வந்தன.

இந்த நிலையில், 53 பேருடன் காணாமல் போன கடற்படை நீர்மூழ்கிக் கப்பல் அமைந்திருக்கும் ஒரு பகுதியை அடையாளம் கண்டுள்ளதாக அந்நாட்டு தேடல் குழுக்கள் தெரிவிக்கின்றனர். கப்பலில் ஆக்ஸிஜன் சில மணி நேரத்திற்குள் வெளியேறும் என்று அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.

அதாவது, காணாமல்போன நீர்முழ்கி கப்பல் பாலிக்கு வடக்கே சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது என்றும் அங்கு டைவ் பாயிண்டிற்கு அருகில் நீரின் மேற்பரப்பில் எண்ணெய் காணப்படுகிறது என கூறியுள்ளனர். இதைத்தவிர நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து வந்திருக்கக்கூடிய ஒரு பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறுகின்றனர்.

இராணுவத்தின் மத்திய தகவல் பிரிவின் தலைவர் ஜெனரல் அக்மத் ரியாட் இதனை பிரபல ஊடகத்தில் தெரிவித்துள்ளார். ஒரு கடற்படைக் கப்பல் 50 முதல் 100 மீட்டர் (164 முதல் 328 அடி) ஆழத்தில் வலுவான காந்த அதிர்வு கொண்ட ஒரு பொருளைக் கண்டறிந்தாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Recent Posts

ஷாக் கொடுத்த ஐரோப்பிய ஒன்றியம்… இந்திய பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனங்கள்!

Indian Items: 527 இந்தியப் பொருட்களில் புற்றுநோய் உண்டாக்கும் ரசாயனங்கள் இருப்பதை ஐரோப்பிய ஒன்றியம் கண்டறிந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் இந்திய தயாரிப்பு…

39 mins ago

ஜேஇஇ தேர்வு முடிவுகள் வெளியீடு.! 56 மாணவர்கள் 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை.!

JEE Main Result: நாட்டின் முதன்மை பொறியியல் கல்வி நிறுவனங்களின் சேர்க்கைக்கான ஜேஇஇ முதன்மை நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகளை தேசிய…

42 mins ago

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் கட்சி பிரமுகர் சுட்டுக்கொலை.!

Bihar : பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் JDU கட்சி பிரமுகர் சவுரப் குமார் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை…

43 mins ago

ஒரு பாடலுக்கு, பாடலாசிரியரும் உரிமை கேட்டால் என்னவாகும்? இளையராஜா வழக்கில் உயர்நீதிமன்றம் கருத்து.!

Ilayaraja: இசையமைப்பாளர் தொடர்ந்த வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. எக்கோ என்ற தனியார் இசைப்பதிவு நிறுவனத்துக்கும், ஏஸ் மியூசிக் நிறுவனத்துக்கும் இடையே, திரைப்படப் பாடல்கள் தொடர்பான…

1 hour ago

வெற்றிக்கு அருகில் வந்து தோல்வி அடைவது வேதனை அளிக்கிறது… சுப்மன் கில்!

IPL 2024: டெல்லி அணிக்கு எதிரான தோல்வி குறித்து குஜராத் கேப்டன் சுப்மன் கில் வேதனை தெரிவித்தார். நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.…

2 hours ago

கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 89 தொகுதிகளுக்கு நாளை தேர்தல்.!

Phase 2 Election: கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 89 தொகுதிகளில் நாளை தேர்தல் நடைபெறுகிறது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று…

3 hours ago