இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதி !

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதியில் வீட்டை விட்டு வெளியேறினர். 

இந்தோனேசியாவில் பாண்டா கடற்பகுதியில் நேற்று இரவு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் 117 கி.மீ ஆழத்தை மையமாக கொண்டதாக கூறியுள்ளனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.9 அலகாக பதிவாகியிருப்பதாக இ.எம்.எஸ்.சி கூறியுள்ளது. 

நிலநடுக்கம் காரணமாக வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்து மக்கள் பீதியில் வீட்டை விட்டு வெளியேறினர். அருகில் உள்ள கிசார் தீவிலும் அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் மூலம் சுனாமி வர வாய்ப்பு இல்லை என்ற அறிவித்துள்ளனர்.

author avatar
Vidhusan