சிங்கப்பூர் விதிமுறையை மீறி நடந்த இந்திய இளைஞர் கைது

  • சிங்கப்பூர் விதிமுறையை மீறி நடந்த இந்திய இளைஞருக்கு சிறைத்தண்டனை.

இந்தியாவை சேர்ந்த ஜீவன் அர்ஜூன் என்ற 29 வயது இளைஞர், கண்தெரியாத தனது மாமியாருடன் சிங்கப்பூரில் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த ஆண்டு தீபாவளி தினத்தன்று, நள்ளிரவு 3 மணியளவில் வீட்டுமுன் பட்டாசுகளை வெடித்துள்ளார்.

இவரது இந்த செயலால் கோபமடைந்த பகுதி மக்கள், ஜீவன் அர்ஜுன் பெயரில் வழக்கு பதிவு செய்தனர். இதுதொடர்பான  நீதிபதி மார்வின் பே வழக்கை நேற்று விசாரித்தார். இதற்கு தீர்ப்பு வழங்கிய நீதிபதி,  குடியிருப்பு நிறைந்த பகுதிகளில் பட்டாசு வெடித்ததால், ஜீவன் அர்ஜூனுக்கு 3 வார கால சிறைதண்டனை மற்றும் இரண்டரை லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment