நாளை நடைபெற உள்ள பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட்டிற்கு நடுவராக இந்திய பெண் நியமனம்..!

நாளை நடைபெற உள்ள பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட்டிற்கு நடுவராக இந்திய பெண் நியமனம்..!

கிரைஸ்ட்சர்ச் நகரில் நாளை உலக கோப்பை கிரிக்கெட் நடைபெற உள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற உள்ள இந்த இறுதிப் போட்டி இந்திய நேரப்படி காலை 6.30 மணி முதல் நடைபெற உள்ளது.

இந்த இறுதி ஆட்டத்திற்க்கான நடுவராக இந்தியாவை சேர்ந்த ஜி.எஸ்.லட்சுமி எனும் பெண் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் போட்டி நடுவர் குழுவில் இடம் பிடித்துள்ள லட்சுமி  ஆந்திராவை சேர்ந்தவர்.

இந்த போட்டிக்கு முன்பாக இவர் ஆண்களுக்கான ஒரு நாள் போட்டியிலும் இதே போல நடுவர் பணியை செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

author avatar
Rebekal
Join our channel google news Youtube