கேப்டன் ஜோ ரூட், டொமினிக் சிப்லே இருவரின் விக்கெட்டை வீழ்த்தமுடியாமல் இந்திய பந்துவீச்சாளர்கள் திணறி வருகிறது.
இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து, தொடக்க வீரர்களாக ரோரி பர்ன்ஸ், டொமினிக் சிப்லே களமிறங்கினர். நிதானமாக விளையாடிய ரோரி பர்ன்ஸ் ரிஷப் பன்ட்டிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார்.
பின்னர், இறங்கிய லாரண்ஸ் வந்த வேகத்தில் 5 பந்துகளை எதிர்கொண்டு ரன் எடுக்காமல் வெளியேறினார். இந்திய அணி 2-வது விக்கெட்டை 26-வது ஓவரில் வீழ்த்தியது. அதன் பின்னர் இந்திய பந்துவீச்சாளர்கள் ஜோ ரூட், டொமினிக் சிப்லே இருவரின் விக்கெட்டை பறிக்க முடியாமல் திணறி வருகின்றனர். கேப்டன் ஜோ ரூட், டொமினிக் சிப்லே இருவரும் அதிரடியாகவும், நிதானமாகவும் விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தி வருகின்றனர்.
ஒருபுறம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தும் கேப்டன் ஜோ ரூட், மறுபுறம் ஜோ ரூட்டிற்கு ஏற்றாற்போல நிதானமாக டொமினிக் சிப்லே விளையாடி வருகிறார். டொமினிக் சிப்லே 250 பந்தில் 83* ரன்களும், ஜோ ரூட் 185 பந்தில் 116* ரன்களுடன் விளையாடி வருகின்றனர். இங்கிலாந்து அணி 84 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து 249 ரன்கள் எடுத்துள்ளது.
சென்னை மைதானம் சூழல் பந்து வீச்சாளர்களுக்கு ஏற்ற மைதானம் என்று கூறப்படுகிறது. இந்திய அணியில் 3 சூழல் பந்து வீச்சாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Mobile Internet Speed Increase : போன் நெட்டை எப்படி வேகமாக மாற்றுவது என்பதற்கான டிப்ஸ் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நம்மில் பலருக்கும் போன் உபயோகம் செய்யும் போது…
Iran Israel Conflict: அடுத்த தாக்குதல் பயங்கரமாக இருக்கும் என்று இஸ்ரேலுக்கு ஈரான் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்தாண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் மீது காசாவை சேர்ந்த…
WHO : உலக சுகாதார நிறுவனம் தற்போது செவித்திறன் பாதிப்பு பற்றிய சில அதிர்ச்சி அளிக்கும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நாம் பாட்டு கேட்பதற்கு பயன்படுத்தும் ஹெட்…
மீனாட்சி திருக்கல்யாணம் -இந்த ஆண்டு மீனாட்சி திருக்கல்யாணம் நடக்கும் நேரம் மற்றும் அதன் சிறப்புகள் பற்றி இங்கே காணலாம். மதுரை சித்திரை திருவிழாவின் அனைவரும் எதிர்பார்த்து ஆவலோடு…
Congress Protest : பிரதமர் மோடி பெங்களூரு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக காங்கிரஸார் சொம்பு வைத்து போராட்டம் செய்து வருகின்றனர். கடந்த 2019 தேர்தலிலும், 2024…
TRB: தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4000 உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதாற்கான அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB)…