2-வது டி20 போட்டியில் 4 புதுமுகங்களுடன் இந்திய அணி பேட்டிங்..!

2-வது டி20 போட்டியில் 4 புதுமுகங்களுடன் இந்திய அணி பேட்டிங்..!

டாஸ் வென்ற இலங்கை அணி தற்போது பந்து வீச முடிவு செய்துள்ளனர்.

இந்தியா, இலங்கை இடையிலான 2-வது டி20 போட்டி நேற்று நடைபெற இருந்த நிலையில் க்ருனால் பாண்டியாவிற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் போட்டி இன்று ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி தற்போது பந்து வீச முடிவு செய்துள்ளனர்.

இந்திய அணி வீரர்கள்: 

ஷிகர் தவான் (கேப்டன் ), ருதுராஜ் கெய்க்வாட்,பாடிக்கல், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), நிதீஷ் ராணா, புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், ராகுல் சஹார், நவ்தீப் சைனி, சேதன் சாகரியா, வருண் சக்ரவர்த்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இலங்கை அணி வீரர்கள்: 

அவிஷ்கா பெர்னாண்டோ, மினோட் பானுகா (வ), தனஞ்சய டி சில்வா, சதீரா சமரவிக்ரமா, தசுன் ஷானகா (கேப்டன்), ரமேஷ் மெண்டிஸ், வாணிந்து ஹசரங்கா, சாமிகா கருணாரத்ன, இசுரு உதனா, அகில தனஞ்சயா, துஷ்மந்தா சமீரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

க்ருனால் பாண்டியாவிற்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், அவருடன் இருந்த 8 வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், புதியதாக 5 வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்ட நிலையில், ருதுராஜ் கெய்க்வாட்,பாடிக்கல், சேதன் சாகரியா, நிதீஷ் ராணா ஆகிய நான்கு புதுமுக வீரர்களுடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது.

author avatar
murugan
Join our channel google news Youtube