இன்று முதல் சிறப்பு ரயில் அட்டவணையில் மாற்றம் – இந்திய ரயில்வே அறிவிப்பு!

இந்தியாவில் கொரோனா காலகட்டத்தை கணக்கில் கொண்டு இயங்கிய சிறப்பு ரயில்களுக்கான கால அட்டவணை தற்பொழுது மாற்றப்பட்டு வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிகவும் பரவி வரக்கூடிய சூழ்நிலையில், அனைத்து போக்குவரத்துக்கு சம்மந்தப்பட்ட துறைகளும் மூடப்பட்டிருந்தது. அண்மை காலங்களாக கொண்டுவரப்பட்டுள்ள தளர்வுகள் அடிப்படையில், இந்தியாவில் சில சிறப்பு ரயில்கள் இயங்கி வந்தது.

இந்த சிறப்பு ரயில்களுக்கான கால அட்டவணையை மாற்றி இந்திய ரயில்வே அமைப்பு தற்பொழுது அறிவித்துள்ளது. அதாவது, இதுவரை   ரயில் எண் 02303-ஹவுரா சிறப்பு (பாட்னா வழியாக) ஜூலை 11, 2020 முதல் சனிக்கிழமை வரை மட்டுமே இயக்கப்படும். ரயில் எண் 02304 புதுடெல்லியில் இருந்து புது தில்லி-ஹவுரா ஸ்பெஷல் (பாட்னா வழியாக) இப்போது ஜூலை 12, 2020 முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே இயக்கப்படும். ஜூலை 16, 2020 முதல் ரயில் எண் 02382-புதுதில்லியில் இருந்து புது தில்லி-ஹவுரா ஸ்பெஷல் (தன்பாத் வழியாக) 2020 ஜூலை 17 முதல் நடைமுறைக்கு வரும் வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே இயக்கப்படும்.

author avatar
Rebekal