# 100 % மின்மயமா’கிறதா? இரயில்வே-பியூஸ் பேச்சு

இந்திய ரயில்வேயை 100% சதவீதம் மின்மயமாக்கலுக்கு பிரதமர் மோடி ஒப்புதல் அளித்துள்ளதாக மத்தியரயில்வே துறைஅமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்து உள்ளார்.

இந்தியா குளோபல் வீக் 2020 நிகழ்ச்சியில்  பங்கேற்றஅமைச்சர் பியூஷ்கோயல் வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசுகையில்:

 

இந்தியா முழுவதும் உள்ள சுமார் 1,20 ஆயிரம் கி.மீ தூரம் முழுவதையும் 100 சதவீதம் அளவிற்கு மின்மயமாக்கல் முறைக்கு  பிரதமர் மோடி ஒப்புதல் அளித்து உள்ளார். எனவே வரும் 2030 ம் ஆண்டில் முதல் 100 சதவத பசுமை ரயில்வேயாக உலகில் இந்தியாவை மாற்ற விரும்புகிறோம்.இந்தியா வரலாற்று ரீதியாக பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறது. தற்போதைய சூழலில் இருந்து மீண்டு வருவதற்கான தெளிவான அறிகுறிகள் உள்ளன. அதே நேரத்தில் விரைவாக முன்னேறக்கூடிய திறனையும் நாங்கள் காட்டி உள்ளோம். என்று கூறினார்.

author avatar
kavitha