இந்திய வீரர்களுக்கு 3 முறை கொரோனா பரிசோதனை எடுக்கப்படும் – பிசிசிஐ..!

இந்திய வீரர்களுக்கு 3 முறை கொரோனா பரிசோதனை எடுக்கப்படும் – பிசிசிஐ..!

நாடு முழுவதும் கொரொனோ 2வது அலையின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க பல நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் கிரிக்கெட் வீரர்கள் சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்த காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்தியா அணி ஜூன் 2 ஆம் தேதி இங்கிலாந்துக்கு சுற்று பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், இந்திய வீரர்கள் வருகின்ற மே 19 ஆம் தேதி மும்பைக்கு வரும் முன் 3 முறை கொரோனா பரிசோதனை எடுக்கப்படுவதாகவும்,  பரிசோதனையில் கொரோனா இல்லை என்று வந்தால் மட்டுமே இலங்கை செல்ல அனுமதி என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. ஜூன் 2 ஆம் தேதி இங்கிலாந்துக்கு பிறப்புடும் முன் 14 நாட்கள் தனிமைப்படுத்தபடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.
Join our channel google news Youtube