ஆஸ்திரேலிய மாஸ்டர் செஃப் பட்டத்தை வென்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜஸ்டின் நாராயண்..!

ஆஸ்திரேலிய மாஸ்டர் செஃப் பட்டத்தை இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜஸ்டின் நாராயண் வெற்றிபெற்றுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜஸ்டின் நாராயண் வென்றுள்ளார்.

உலக அளவில் மிகப்புகழ் பெற்ற சமையல் நிகழ்ச்சி ஆஸ்திரேலியாவில் நடக்கும் மாஸ்டர் செஃப் டிராபி நிகழ்ச்சி. தற்போது இதன் பதிமூன்றாவது சீசனின் இறுதி போட்டி நேற்று ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. இந்த இறுதி போட்டிக்கு மூன்று பேர் தேர்வாகியுள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜஸ்டின் நாராயண், ஆஸ்திரேலியாவை சேர்ந்த பீட் கேம்பெல், வங்கதேச வம்சாவளியை சேர்ந்த கிஷ்வர் சௌத்ரி ஆகிய மூன்று பேரும் பரபரப்பான இறுதிப்போட்டிக்கு தேர்வாகி கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், ஆஸ்ரேலியாவில் நடக்கும் பதிமூன்றாவது சீசனின் மாஸ்டர் செஃப் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜஸ்டின் நாராயண் என்று அறிவித்துள்ளனர். இந்த வெற்றியானது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், ஜஸ்டின் நாராயனுக்கு பலரும் சமூக வலைத்தளத்தில் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

இருபத்தேழு வயதாகும் ஜஸ்டின் நாராயனுக்கு மாஸ்டர் செஃப் சீசன் 13 ட்ராபி வழங்கப்பட்டது. மேலும், முதல் பரிசின் பரிசுத்தொகையான இந்திய மதிப்பின் படி, ரூ.1.86 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.