இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் ஐ.நா. பொது செயலாளருடன் பேச்சுவார்த்தை!

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் ஐ.நா. பொது செயலாளருடன் பேச்சுவார்த்தை!

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் 5 நாள் அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

அவர் அங்கு ஐ.நா. பொது செயலாளர் அன்டோனியா குட்ரெஸை நேரில் பார்த்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். அந்த பேச்சு வார்த்தையில் இருவரும், இந்தியாவின் கொரோனா தாக்கம் பற்றியும், ஆப்கானிஸ்தான் நிலைமை பற்றியும் பேசியதாக தகவல் வெளிவந்துள்ளது.

இவர்கள் இருவரும் கிட்டத்தட்ட 1 மணி நேரத்திற்கும் அதிகமாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதில், கொரோனா தொற்றுக்கான தடுப்பூசியை அதிகரிப்பதை குறித்தும், எல்லாநாடுகளுக்கும் சமமாக தடுப்பூசி கிடைக்க வேண்டும் என்பதை குறித்தும் ஜெய் சங்கர், அன்டோனியா குட்ரெஸிடம் கூறியுள்ளார்.

Join our channel google news Youtube