இலங்கைக்கு புறப்பட்டது இந்திய கிரிக்கெட் அணி..!!

இலங்கைக்கு புறப்பட்டது இந்திய கிரிக்கெட் அணி..!!

டி20, ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க விமானம் மூலம் இலங்கை புறப்பட்டுச் சென்றது இந்திய கிரிக்கெட் அணி. 

இந்திய கிரிக்கெட்  வருகின்ற ஜூலை 13- ஆம் தேதி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 கொண்ட கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடரில் பங்கேற்க விமானம் மூலம் இலங்கைக்கு ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி புறப்பட்டுச் சென்றது. இந்த தொடரில் இந்திய அணியை வீரர் ஷிகர் தவான் வழிநடத்த உள்ளார். அணியில் ஹர்திக் பாண்ட்யா, சஞ்சு சாம்சன், இஷன் கிஷன், குல்தீப் யாதவ், தேவ்தத் படிக்கல், யுஸ்வேந்திர சாகல், உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

இது குறித்து கேப்டன் ஷிகர் தவான் கூறுகையில், இந்திய அணியின் கேப்டனாக அணியை நான் வழிநடத்த கிடைத்திருக்கும் வாய்ப்பு மிக பெரிய கவுரவம். இந்த தொடருக்காக நங்கள் சிறப்பாக தயாராகி வருகிறோம். சிறந்த பயிற்சியாளரான ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழ் இந்திய அணிக்காக நான் வங்கதேச தொடரில் கேப்டனாக விளையாடி உள்ளேன்.  இந்த தொடரில் அவர் எங்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளது மிகவும் சிறப்பானது விஷயம்.  ஒரு அணியாக நாங்கள் இணைந்து நிச்சயம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்.” என்று தெரிவித்துள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.
Join our channel google news Youtube