சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வரும் இந்திய கிரிக்கெட் வீரர்களின் புகைப்படம் !

உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி வீரர்கள் ஓய்வில் இருக்கும் சமயத்தில் சமுக வலைதளத்தில் புகைப்படம் ஒன்றால் ட்ரெண்டாகி வருகின்றனர். சமுக வலைதளத்தில் பெரும்பாலும் ஒரு விசயத்தை எடுத்துக்கொண்டு அதில் மீம்ஸ் தயார் செய்து ட்ரெண்டாக்குவர். அந்த வகையில் இந்திய அணி வீரர்களான தோனி, ஜடேஜா, சாஹால், ரோஹித், கோலி, தினேஷ் கார்த்தி, புவனேஷ்வர் குமார் ஆகியோரின் புகைப்படத்தை முதியவர்கள் போல் எடிட் செய்து சமுக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர். இந்த புகைப்படத்தில் உயமான தோற்றம் போலவே தயாரித்துள்ளனர். அதுமட்டுமின்றி அதில் 2051 உலகக்கோப்பையில் விளையாடும் வீரர்கள் என்றும் எழுதி இருந்தது. புகைப்படத்தை அனைவரும் தனது நண்பர்களுக்கு செய்து வருகின்றனர்.

author avatar
Vidhusan