ஐ.நா-வின் சுற்றுசூழல் விருதுக்கு இந்திய தொழிலதிபர் தேர்வு!

ஐ.நா-வின் சுற்றுசூழல் விருதுக்கு இந்திய தொழிலதிபர் தேர்வு!

இந்திய இளம் தொழிலதிபர் வித்யுத் மோகன் ஐ.நா சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு வழங்கும், ‘புவியின் இளம் சாதனையாளர்’ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

ஐ.நா சபையானது, அமெரிக்காவின் நியூயார்க்கை தலைமையிடமாக வைத்து செயல்பட்டு வருகிறது.  ஐ.நா சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக சிறந்த ஆலோசனைகளை வழங்குவதோடு, அதை செயல்படுத்தும் இளம் தொழில் அதிபர்களுக்கு, ‘புவியின் இளம் சாதனையாளர்’ என்ற விருதை வழங்கி வருகிறது.

இதனையடுத்து இந்த ஆண்டு, இந்த விருதுக்கு இந்திய இளம் தொழிலதிபர் வித்யுத் மோகன் உட்பட 7 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகள் விவசாய கழிவுகளை எரிப்பதால் ஆண்டுதோறும் டெல்லியில் காற்று மாசு ஏற்படுகிறது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

இதற்கு தீர்வு காணும் வகையில், மோகன் 2018-ம் ஆண்டு, ‘டகாசார்’என்ற நிறுவனத்தை, கெவின் என்பவருடன் இணைந்து துவங்கினார்.இந்த நிறுவனமானது விவசாயிகள் விவாசாய கழிவுகளை எரிப்பதை தடுப்பதோடு, அதனை வருமானமாக்கும் வழிமுறைகளையும் கற்றுக்கொடுக்கிறது. மேலும் விவசாயிகளிடமிருந்து வைக்கோல், உமி, தேங்காய் நார்கள் ஆகியவற்றைக் இந்த நிறுவனம் வாங்கி, கரி தயாரிக்கிறது.

இதனால் விவசாயிகளுக்கு வருமானம் கிடைப்பதோடு, காற்று மாசு கட்டுப் படுத்தப்படுகிறது. இந்திய இளம் தொழிலதிபர் வித்யுத் மோகனின் இந்த பணியை பாராட்டி, ஐ.நா. இவருக்கு புவியின் இளம் சாதனையாளர் விருதுக்கு தேர்வு செய்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube