அதிர்ச்சி…பதக்க வாய்ப்பை இழந்தார் சவுரப் சவுத்ரி…!

டோக்கியோ ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் சவுரப் சவுத்ரி பதக்க வாய்ப்பை இழந்தார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று 32-வது ஒலிம்பிக் போட்டியின் திறப்பு விழாவானது தொடங்கி,தற்போது போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி,டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற மகளிர் 10 மீ ஏர் ரைபிள் பிரிவின் இறுதிப் போட்டிக்கு இந்தியாவின் இளவேனில் வலரிவன் மற்றும் அபுர்வி சண்டேலா தகுதி பெறத் தவறிவிட்டனர்.

முதல் இடம்:

இதனையடுத்து,டோக்கியோ ஒலிம்பிக்கில் 10 மீ ஆண்கள் ஏர் பிஸ்டல் பிரிவில்,இந்தியாவின் சவுரப் சவுத்ரி மொத்தம் 586 மதிப்பெண்களைப் பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.மேலும்,சவுத்ரி முதலிடத்தைப் பிடித்தார்.மற்றொரு வீரரான அபிஷேக் வர்மா 575 புள்ளிகள் பெற்று 17 வது இடம் பிடித்ததால்,போட்டியிலிருந்து வெளியேறினார்.

அதிர்ச்சி:

இந்நிலையில்,ஆண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் 137.4 மதிப்பெண்களுடன் 7 வது இடத்தைப் பிடித்ததால்,பதக்க வாய்ப்பை இழந்துள்ளார்.இது இந்தியாவிற்கு அதிர்ச்சியளிக்கும் செய்தியாகவுள்ளது.

மேலும்,இப்போட்டியில் ஈரான் வீரர் ஜாவித் ஃபரூக்கி 244.8 மதிப்பெண்களுடன் ஒலிம்பிக் சாதனை படைத்து தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.