தென்கொரியாவை தெறிக்கவிட்டு தொடரை கைப்பற்றியது இந்தியா

இந்திய மகளிர் ஹாக்கி அணியானது தென்கொரியாவில் மூன்று போட்டிகள் அடங்கிய இருதரப்பு மகளிர் ஹாக்கி போட்டிக்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.இதற்கான முதல் நாள் மற்றும் தொடக்க போட்டியானது நடைபெற்றது .அதில் இரு அணிகளும் மோதின.

Related image

ஆட்டம் அனல் பறக்கவே மீண்டும் ஒரு கோலை 40 வது  நிமிடத்தில்  இந்தியாவின்  நவ்னீத் கவுர் அடிக்கவே இந்தியா 2-1 என்று முன்னிலை வகித்தது.இதனால் முதல் போட்டியை இந்தியா வென்றது.

Related image

இந்நிலையில் இரண்டாவது போட்டியானது இன்று நடைபெற்றது.இதிலும் இந்திய மகளிர் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

Related image

இந்த போட்டியில் கேப்டன் ராணி 37 வது நிமிடத்தில் அடித்த ஒரு கோல் மற்றும் 50 வது நிமிடத்தில் நவ்ஜோத் கவுர்  அடித்த ஒரு கோலும் இந்திய அணிக்கு கை கொடுக்கவே 2-1 என்று முன்னிலை பெற்று தொடரையும் 2-0 என்கிற கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.இந்நிலையில் கடைசி மற்றும் முன்றாவது போட்டி நாளை மறுதினம்(வெள்ளிக்கிழமை ) நடைபெறுகிறது

author avatar
kavitha

Leave a Comment