இந்தியா கட்டாயம் ஒரு நாள் நிலவுக்கு மனிதனை அனுப்பும்.! இஸ்ரோ தலைவர் அதிரடி பேட்டி.!

இந்தியா கட்டாயம் ஒரு நாள் நிலவுக்கு மனிதனை அனுப்பும்.! இஸ்ரோ தலைவர் அதிரடி பேட்டி.!

  • பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் சிவன், இந்தியா கட்டாயம் ஒரு நாள் நிலவுக்கு மனிதனை அனுப்பும். ஆனால், தற்போதைக்கு இல்லை என்றும் தெரிவித்தார்.
  • மேலும், இந்திய விண்வெளி ஆராச்சி மையம் சந்திரயான்-3 மற்றும் ககன்யான் திட்டத்தின் வேலைகள் வேகமாக நடந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் சிவனிடம், நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் குறித்து கேட்டதற்கு, அவர் இந்தியா கட்டாயம் ஒரு நாள் நிலவுக்கு மனிதனை அனுப்பும். ஆனால், அது தற்போதைக்கு இல்லை என்றும் தெரிவித்தார். மேலும், ககன்யான் திட்டத்தை குறித்து பேசிய அவர், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்காக நான்கு விண்வெளி வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இந்த மாத இறுதியில் பயிற்சிக்காக ரஷ்யா செல்வார்கள் என்றும், பின்னர் 1984-ம் ஆண்டு இந்திய விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா ரஷ்ய விண்கலத்தில் விண்வெளிக்கு சென்றார்.

இந்நிலையில், தற்போது இந்திய வீரர்கள், இந்தியாவிலிருந்து இந்திய விண்கலத்தில் செல்ல இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டார். இந்திய விண்வெளி ஆராச்சி மையம் சந்திரயான்-3 மற்றும் ககன்யான் திட்டத்தின் வேலைகள் வேகமாக நடந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், சந்திரயான்-2 நிலவில் தறையிரங்கும் முயற்சி தோல்வி அடைந்தது. அதனைத் தொடர்ந்து சந்திரயான்-3 மூலம் அதனை நிலவில் தரையிறக்கி சாத்தியமாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது என்று, இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube